Articles

 இன்றைய தினம்,  திருச்சபையின் மேய்ப்பர் குடும்பத்தின் 34 வது ஊழியப்பாதையின் நிறைவை முன்னிட்டும்திருச்சபையின் 25 வது ஆண்டு நிறைவை முன்னிட்டும்  சபை மேய்ப்பரின்           விசேஷ செய்தி:

 

கலங்கி நிற்கும் உலகத்துக்குமுன்னே

தேவபிள்ளையே நீ கலங்காதே!

------------------------------------------

கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக!

உலகமெங்கும் "நோவல் கொறோனாஎன்ற பாழாக்கும் கொள்ளை நோய் மனுக்குலத்தை அச்சுறுத்தும் இவ்வேளையிலேமனுக்குலம் முழுவதும் கலங்கிப்போயிருக்கிறதுஇவ்வேளையில்  நமது ஊழியப்பாதையையும்சபையின் மகிழ்ச்சியான நாளையும் நினைவுகூர கர்த்தர் கிருபையளித்தார்கர்த்தருக்கு ஸ்தோத்திரம்இந்த வேளையிலே கர்த்தருடைய ஜனமாகிய நமக்கு கர்த்தர் முக்கிய செய்தியொன்றைத் தருகிறார்.

கர்த்தர் இயேசு தமது இரண்டாம் வருகைக்கும்உலகத்தின் முடிவுக்குமுரிய அடையாளங்களை தமது சீஷருக்கு கூறியபோது,

"யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்ஜனத்துக்கு விரோதமாய் ஜனங்கள் எழும்புவார்கள்ராஜ்யத்துக்கு விரோரமாய் ராஜ்யம் எழும்பும்பஞ்சங்களும்கொள்ளை நோய்களும்பூமியதிர்சிகளும் பல இடங்களில் உண்டாகும்கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதேஇவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்என்று  சொல்லி அவர்களைத் திடப்படுத்தினார்.  அப்படியே இன்றும் உங்கள் அனைவரையும் திடப்படுத்துகிறார்இன்றும் நீங்கள் கலக்கத்தோடும்பயத்தோடும்உங்கள் எதிர்பார்ப்புகளைக் குறித்த கேள்வியோடுமிருக்கிறீர்கள்கலங்கவேண்டாம் என்று கர்த்தர் சொல்லுகிறார்அன்று கர்த்தருக்கென்று அக்கினியாய் பற்றியெரிந்த எலியாஒரு பெண்ணுடைய பயமுறுத்தலைக் கண்டு பயந்து   வனாந்திரத்திற்கு ஓடிப்போய்  சோர்வினால் படுத்துக்கொண்டார்கர்த்தரோ அவருக்கு தண்ணீரும் போஜனமும் கொடுத்துநீ செல்லவேண்டிய பிரயாணம் வெகு தூரம்எழுந்திரு என்று திடப்படுத்தினார்தேவபிள்ளைகளேஉங்களை அழைத்த தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் குறித்து ஒரு நோக்கம் வைத்திருக்கிறார்.

நீங்கள் அவருக்காக செய்யவேண்டிய வேலைகள் அநேகம் உண்டு.

அவரது வருகைக்கு முன்பாக  சகல ஜனங்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்கவும், ஜனங்களை கர்த்தரண்டை திருப்பவும் அநேக வேலைகள் உண்டு.

கர்த்தர் யார்? அவரது வல்லமை எப்படிப்பட்டது? என்பதை உலகத்துக்கு காண்பிக்கும் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இப்படியிருக்கும்போது இந்த உலகத்தையே கலக்கும் கொடிய வைரஸாக தன்னைக் காண்பிக்கும் இந்த நோவல் கொரோனாவுக்கு நீங்கள் கலங்கி பயந்து சோர்ந்து போகலாமா?

சகோதர, சகோதரிகளே! எழுந்திருங்கள், பெலன்கொள்ளுங்கள், தைரியமடையுங்கள்!  கர்த்தருடைய வருகைக்கு வழியை ஆயத்தப்படுத்த வேண்டிய மாபெரும் பொறுப்பை கர்த்தர் நம்மிடம் தந்திருக்கும்போது இந்த கொரோனா நம்மை என்ன செய்யமுடியும்? இந்த "நோவல் கொரோனா வைரஸ்" உலகத்தைக் கலக்குகிதாக நீங்கள் காணக்கூடாது. உலகத்தைக் கலக்குகிறவர்கள் சுவிசேஷத்தை கையில் எடுத்திருக்கும் நாம்தான் என்று பரிசுத்த வேதாகமம்/அப்.17:6 அறிவிக்கிறது. ஆகவே, சுவிசேஷத்தை கொண்டுசெல்லும் உங்களைக்கண்டே இந்த உலகம் கலங்குகிறது.

அல்லேலூயா ஆரவாரத்தைக் கேட்டே இந்த உலகம் கலங்குகிறது.

பரிசுத்த பைபிளை உங்கள் கையில் கண்டதும் இந்த உலகம் கலங்குகிறது.

மட்டுமல்ல பாதாள வல்லமைகளும் கலங்கி நடுங்குகிறது.

இந்த நோவல் கொரோனாவே உங்களையும் நம்மையும் கண்டு கலங்குவதை இன்னும் அறியாமலிருக்கிறீர்களா?

பிரியமான பிள்ளைகளே! கலங்கி பயந்து சோர்வடையவேண்டாம். கலங்கி பயந்து சோர்வடைந்திருக்கும் உலகத்தை ஆறுதலளித்து அவர்களை திடப்படுத்தப் புறப்படுங்கள்.

"நம்மை ஆட்கொண்டவரும், நாம் சேவிக்கிறவருமான தேவன் யார், அவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்திருக்கிறோமே. அவரில் உங்கள் விசுவாசம் உறுதியாய் பெலப்படட்டும். நாமே கலங்கி நின்றால் கலங்கி நிற்கும் இந்த மக்களுக்கு ஆறுதலளித்து அவர்களை திடப்படுத்துகிறவர்கள் யார்? இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்காக, தேசங்களுக்காக நமது கர்த்தர் இயேசுவை நோக்கி ஒருமனதோடு ஜெபிக்கவேண்டியவர்கள் நாமும் நீங்களுமே.

இந்த வைரஸ் நோயினால் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களின் ஆறுதலுக்காக  நமது கர்த்தர் இயேசுவை நோக்கி ஒருமனதோடு ஜெபிக்கவேண்டியவர்கள் நாமும் நீங்களுமே.

இந்த கொடிய வைரஸின் வீரியம் குறைந்து செயலிழந்துபோகவும், அதன் வல்லமைகளைக் கட்டவும் கர்த்தர் இயேசுவிடமிருந்து அதிகாரத்தைப் பெற்றிருக்கிறவர்களும் நாமே.

ஆகவே பிரியமான தேவ பிள்ளைகளே! இயேசுவின் கல்வாரி இரத்தம் நம்மை மூடியிருக்கிறது. நாம் பாதுகாக்கப்பட்டிருக்கிறோம். கலங்கி நிற்கும் உலகத்துக்கு ஆசீர்வாதத்தின் ஜனமாய் காணப்படுவோம்.

 

உறக்கம் தெளிவோம்

உற்சாகம் கொள்வோம்

உலகத்தின் இறுதிவரை

கல்வாரி தொனிதான்

மழைமாரி பொழியும்

நாள்வரை உழைத்திடுவோம்

 

கர்த்தர் உங்களையும், உங்கள் குடும்பத்தையும், சந்ததிகளையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்!

ஆமோஸ்  8:3  ல் ஆமோஸ் மூலம் தேவன் உரைத்த தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாக இக் கொடியகாலத்தை காண்கிறோம். இந்நாட்களில் தேவாலயப் பாட்டுகள் அலறுதலாக மாறிவருகிறது. தேவபயம், தேவபக்தி அற்றுப்போய் குத்தாட்டம், துள்ளித்துள்ளி பாய்தல், புத்திதெளிவற்றவர்கள் போன்று சிரிப்பது, கூக்குரல்கள், விசிலடிப்புகள், இயேசுவே!!! இயேசுவே!!! இயேசுவே!!! இயேசுவே!!! என்று கூக்குரலிடுதல்  இப்படியே கர்த்தரின் சபைகள் கூத்தாடிகளின் கூடாரமாக மாறிவருகிறது. தேவ பிரசன்னத்தை ஜனங்கள் காண்பதற்குப்பதிலாக தேவ பிரசன்னம் என்ற மாயத்தோற்றத்தில் லூசிபர் என்ற சாத்தானின் பிரசன்னத்தில் அநேக வாலிபப் பிள்ளைகளும், பெரியவர்களும் சிக்கியிருப்பது துக்ககரமான நிலையாகும். இப்படியான கூத்தாடிகள் தங்களை பாஸ்டர் என்ற மகிமையான அபிஷேகத்தை தங்களுக்குத் தாங்களே தரித்துக்கொண்டு ஜனங்களை வஞ்சித்துக்கொண்டிருக்கிறார்கள். பாஸ்டர் என்பது ஒரு மகிமையான அழைப்பு. இதை சிலர் எங்கோ இருந்து வந்தவர்களிடம் பணம் கொடுத்தும் அறிமுகங்களின் அடிப்படையிலும் ஒரு சான்றிதல் மூலம் பெற்றுக்கொண்டு தாங்களும் பாஸ்டர் என்று கூத்தாடி வேஷம் போட்டிருக்கிறதை காணமுடிகிறது. பொதுவாக சினிமா நடிகர்களை கூத்தாடிகள் என்று அழைப்பதை அறிந்திருக்கிறேன். ஆனால், அது அவர்களுக்குப் பொருத்தமற்றது. காரணம் சினிமாத்துறை நடிகர்களுக்கு ஒரு திறமையும் தகுதியும் உண்டு. ஆனால், மேற்குறிப்பிட்டபடி பாஸ்டர் என்று வேஷம் போட்டிருக்கும் கூத்தாடிகள் தங்கள் நடக்கைகளினால் கிறிஸ்துவின் பரிசுத்த நாமம் தூஷிக்கப்பட முழுக் காரணராயிருக்கிறார்கள். பாஸ்டர் என்ற அழைப்பு வேதாகம கல்லூரியினாலோ, படிப்பு பட்டங்களாலோ, பல திறமைகளாலோ, தாலந்துகளாலோ வருவது அல்ல. பாஸ்டர் என்ற அழைப்பு தேவனால் உண்டானது. பாஸ்டர் அழைப்பு உடையவன் தன் சபையில் தன் மந்தைகளுக்காக தன்னையே அர்ப்பணித்து தன் மந்தைகளோடு நேரத்தை செலவுசெய்வான். அல்லதுபோனால் அவன் கூலியாளாய் இருக்கிறானேதவிர அவன் மேய்ப்பன் (பாஸ்டர்) அல்ல. ஆகவே, இந்த வஞ்சகர்களிடமிருந்து கர்த்தரின் சபைகள் பாதுகாக்கப்படவேண்டும். கர்த்தரின் பரிசுத்த நாமம் மட்டுமே சபைகளில் மகிமைப்படவேண்டும்.

1.இரா.18  ம் அதிகாரத்தில் பாகால் தீர்க்கதரிசிகள் உரத்த சத்தமாய் பாகாலே!!! பாகாலே!!! பாகாலே!!! பாகாலே!!! என்று காலை தொடக்கம் மதியம் வரை கூப்பிட்டு அவனது பலிபீடத்துக்கு எதிரே குதித்து ஆடினார்கள் என்று காண்கிறோம். இந்த பாகாலின் ஆவியை உடையவர்களே வஞ்சகமாய் கர்த்தரின் சபைகளுக்குள் புகுந்து பரிசுத்த தேவனுடைய பலி பீடத்தை அசிங்கப்படுத்துகிறார்கள் என்பதை பரிசுத்த ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் தேவ ஊழியர்களும் தேவ ஜனங்களும் அறியாதிருக்கிறீர்களா? எவ்விதமாக நமது ஆதித்தாயை வஞ்சித்து, தேவன் தடைசெய்த கனியை அவவைக் கொண்டே பிடுங்கவைத்து அவவையும் சாப்பிடவைத்து, அவவைக்கொண்டே தன் கணவனுக்கும் கொடுக்கவைத்த வஞ்சகனும் தந்திரசாலியுமான சாத்தான் (பழைய பாம்பாகிய வலுசர்ப்பம்) தேவனுடைய பிள்ளைகளைக்கொண்டே அவருடைய பரிசுத்த பலிபீடத்தையும் அசிங்கப்படுத்தி தன் திட்டத்தை திறமையாக நிறைவேற்றிவருகிறான் என்பதை உணரவேண்டும். சபையின் ஊழியராயினும், தேவபிள்ளைகளாயினும்  பாகாலின்  ஆவிகளைப் பகுத்தறிந்து கர்த்தரின் சபையையும் அதின் மகிமையையும், சபையின் மந்தைகளையும் காத்துக்கொள்ள வேண்டும். பாகாலின் ஆவிகளையுடையவர்கள் சிலவேளைகளில் நல்ல சத்தியங்களை போதிக்கிறார்கள் என்று  சிலர் திருப்திப்பட்டுக்கொள்ளுகிறார்கள். சாத்தானின் தந்திரமே இங்கேதானிருக்கிறது. எச்சரிக்கை! கெட்டமரம் நல்ல கனியைக் கொடுக்குமா? நமது திருப்தி நமது கர்த்தருடைய வார்த்தையை அவமாக்கிவிடக்கூடாது. தேவ வார்த்தையை எடுத்துக் கூறுபவர் நல்ல மரமா? கெட்ட மரமா? என்பதை முதலில் சோதித்துப் பார்க்கவேண்டியது அவசியம். கர்த்தருடைய உறவில் மாத்திரம் நிலைத்திராமல்  வேறொரு உறவையும் நாடிய நம் ஆதித் தாய்க்கு அவன் காட்டிய வழி புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியை தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்கதாகவுமிருந்தது.

இக்காலம் கடைசி நாட்களின் கொடிய காலம் என்பதை மறக்கக்கூடாது. இக் காலத்தில்த்தான் கள்ளத் தீர்க்கதரிசிகள், கள்ளப் போதகர்கள், ஒளியின் தூதனுடைய வேஷத்தை தரித்துக்கொண்ட சாத்தானின் ஊழியர்கள் ஏராளமாய் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவரும் அவர்களை தெளிவாக அடையாளப்படுத்திக் காண்பித்துக் கொண்டிருக்கிறார். இந்தவேளையில் பரிசுத்த ஆவியானவரின் சத்தத்துக்கு செவிகொடாமல், அவர்களுக்கு கூடும் கூட்டத்தை வைத்தும், அவர்களைக் குறித்த மனுஷ ஆதரவுகளையும் கவர்ச்சியான விளம்பரங்களையும் பார்த்து தவறான முடிவுகளை எடுத்துவிடுகிறீர்கள். இதனால் கர்த்தருடைய அங்கீகாரத்தை இழந்துவிடுகிறீர்கள்.

சகோதரர்களே! எச்சரிக்கையாயிருங்கள். கர்த்தருடைய வழியில் நின்று உங்களை காத்துக்கொள்ளுங்கள்.

கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

இயேசு நமக்காக (மனுக்குலத்துக்காக)  கோரச் சிலுவையிலே தம்மையே   பாவநிவாரண  ஜீவ பலியாக ஒப்புக்கொடுத்ததை  பெரிய வெள்ளியாகிய  இன்று உலகமடங்கிலும் கிறிஸ்தவர்கள் நினைவு கூருகிறார்கள். நாமும்கூட நினைவுகூருகிறோம். "சிலுவை" சாபத்தின் ஒரு அடையாளம். தேசத் துரோகிகளை அன்று சிலுவையில் அறைந்து மரணதண்டனையை நிறைவேற்றுவார்கள். "மரத்தில் தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன்" (கலா.3:13) என்று எழுதியிருக்கிறதே. இந்த  கரடு முரடான பாரச் சிலுவையை தாமே ஏற்றுக்கொண்டு, தம் தோளில் சுமந்தவராய்,  கல்வாரி மலைக்கு சர்வலோகத்தின் சகல மனுஷர்களுடைய பாவப்பலிப்பொருளாக  கர்த்தர் இயேசு சென்றார். யாருக்காக? நமக்காக. அப்பொழுதுதான் அழுது புலம்பிக்கொண்டு அவர் பின்னே சென்ற ஸ்திரீகளைப் பார்த்து  "எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்."(லூக்கா 23:27-28) என்று கர்த்தர் இயேசு  சொன்னார். கர்த்தர் இயேசு நமக்காக பாடுகள் பட்ட இந்த நாட்களை பாடுகளின்  பரிசுத்தவாரமாக அனுஷ்டிக்கிறோம். அவரது பாடுகளை தியானிக்கும்போது நம் கண்களில் கண்ணீர் சிந்துகிறோம் இன்று இது பாரம்பரிய  நிகழ்வாகவும் மாறிவிட்டது பிரியமானவர்களே! கர்த்தர் இயேசு நமக்காக எல்லாவற்றையும் தாமே  கல்வாரி சிலுவையில் செய்து முடித்துவிட்டார். அவர் பட்ட பாடுகளை இந்த உலகத்தில் எந்த மனுஷனும்  அனுபவிக்கமுடியாது. நாம் நமது பாவ அக்கிரமங்களுக்காக அடையவேண்டிய தண்டனையை அவரே அடைந்து தீர்த்துவிட்டார். இனி அவருக்காக அழாமல், நமதும் நமது பிள்ளைகளினதும் நிர்ப்பந்த நிலையை உணர்ந்து அழுது புலம்பி நாளுக்குநாள் மனந்திரும்பி மறுரூபவாழ்வுக்கு ஒப்புக்கொடுத்து வாழ்வதையே கர்த்தர் இயேசு விரும்புகிறார். (இதுவே, அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட நம் ஒவ்வொருவரைக் குறித்தான தேவசித்தமாயிருக்கிறது). அன்று பழைய ஏற்பாட்டு மக்களின் பாவ நிவர்த்திக்காக தேவ ஒழுங்கின்படி கட்டப்பட்ட பலிபீடம், புதிய ஏற்பாட்டின்படி கர்த்தர் இயேசு சிலுவையில் அறையப்பட்டு, தமது பரிசுத்த இரத்தத்தைச் சிந்திய சிலுவையை குறிக்கிறது. சர்வ லோகத்தின் சகல மனுஷர்களுடைய பாவங்களை தம்மீது சுமந்தவராய் கிறிஸ்துவாகிய தேவ ஆட்டுக்குட்டி இரத்தம் சிந்தி சிலுவையில் பலியானாரே. அந்த பரிசுத்த இரத்தம் சிலுவையில் வழிந்தோடியது. அதனால், சபிக்கப்பட்ட சாபமான சிலுவை  ஒரு புனித சின்னமாக மாறியது. ஆனால், இது வணக்கத்துக்குரியதல்ல, இது ஒரு சின்னமே. இதனால், தற்போது மரத்தால் செய்த சிலுவையை நாம் தூக்கி சுமக்கவேண்டுமென்று அல்ல. (அவர் நமக்காக அந்த கரடு முரடான கோரமான பாரச்சிலுவையை சுமந்து தீர்த்துவிட்டார்) ஒரு சிலுவைச் சின்னத்தை வைத்து பணிந்துகொள்ளவேண்டுமென்றல்ல. (இவைகளில் எந்த வல்லமையும் இல்லை நாம் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்கிறவர்களாய், சத்தியத்தின்படி நடக்க நம்மை ஒப்புக்கொடுத்து அவர் ஒருவருக்கே சாட்சியாக வாழும்போது, நாம் பிற மனுஷராலும், நம் வீட்டாராலும் அடையும் நிந்தை அவமானங்கள் நமக்கு சிலுவையாக இருக்கிறது. இந்த சிலுவையை  அனுதினமும்  சுமந்துகொண்டு அவரைப் பின்பற்றவே அழைக்கப்பட்டிருக்கிறோம். மத்தேயு 14:27 ல் "தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்கு சீஷனாயிருக்கமாட்டான் என்று நமது கர்த்தர் இயேசு சொல்லுவதை நம் இருதயத்தில் ஏற்றுக்கொண்டு இந்த பரிசுத்த வாரத்தை பக்தியோடு ஆசரிப்போமாக

"திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள். இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்."(லூக்கா 23:27-28  ) என்றார்.

 ஆமென்!

கிறிஸ்தவர்களாகிய நமக்கு அரசியல் தேவையா?

பிரியமானவர்களே! கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக எழும்பும் உபத்திரவங்களை நோக்கமாக வைத்து இன்று கிறிஸ்தவர்களுக்கென ஒரு அரசியல் கட்சி தேவையென்றும், அரசியலில் ஒரு இடம் தேவையென்றும் சிலர் எண்ணி செயற்படுகிறார்கள். குறிப்பாக அண்மித்துவரும் இந்திய பராளுமன்ற தேர்தலை உதாரணமாகக் கொள்ளலாம். நாம் மறுபடியும் பிறந்தவர்கள், நாம் தமது ராஜ்யத்துக்கென கர்த்தரால் இந்த உலகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவர்கள் என்ற நிட்சயமுடையவர்களானால் நமக்கும், இந்த உலகராஜ்ய அரசியலுக்கும் சம்பந்தமென்னயோவான் 18:36, 17:16  ல் "என் ராஜ்யம் இவ்வுலகத்துக்குரியதல்ல" என்றும், "நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும்(அதாவது, தம்மை பின்பற்றுகிற தமது சீஷர்களும்) உலகத்தாரல்ல" என்று திட்டமாக நமது கர்த்தர் இயேசு கூறுவதை கவனிக்கவேண்டும்.       இன்று நமக்கெதிராக எழும்பியிருக்கும் உபவத்திரவங்களை நோக்கும்போது கடந்தகால உபவத்திரவங்களைக் குறித்த சரித்திரங்களை நாம் அறியாதவர்கள் அல்லவே. அப்படிப்பட்ட உபத்திரவங்களை இன்னும் நாம் அனுபவிக்க கர்த்தர் விடவில்லையே. அதற்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்க எவ்வளவாக கடமைப்பட்டிருக்கிறோம். அரசாங்கங்கள், ஆளுநர்கள் கிறிஸ்தவர்களாகிய நமக்கு விரோதமாக இருக்கிறார்களா?   இயேசுகிறிஸ்துவையும், அவரது பரிசுத்தத்தையும், அவரது பரிசுத்த வேதாகமத்தையும் தூஷிக்கிறார்களா? இது இன்று எமக்குப் புதிதல்ல. புதிய அனுபவமுமல்லவே. நாம் சரித்திரம் அறியாதவர்களா? தேசத்துக்காக, அரசாங்கத்துக்காக, அரச தலைவருக்காக, அதிகாரிகளுக்காக, இந்திய தேசத்திலே சில தேவ ஜனங்களுக்கு உண்டாயிருக்கும் உபத்திரவங்களுக்காக ஜெபிக்க ஒருமனப்படுவோம் வாருங்கள் என்று அழைப்பு விடுக்கும்போது ஒருவர் வந்து கூடுவதே அரிதாக காணப்படுவதுதான் இன்றைய கிறிஸ்தவர்கள் மத்தியில்    காணப்படும் பரிதாப நிலை. ஆனால், ஐயையோ இந்தியாவிலே  ஆத்துமாக்கள் அழிந்துபோகிறார்களே என்று பெரும் பரிதாபத்துடன் இரண்டு மாதங்களுக்கொரு தடவை இந்தியாவுக்கு பறந்து திரிவோர்   இவ்விதமான ஜெபங்களுக்கு ஐக்கியப்பட மாட்டார்கள். அதேவேளை, தங்கள் சபை கொட்டாட்டங்கள், பிறந்த நாள் கொண்டாட்டங்கள் போன்றவைகளில் தங்கள் நேரத்தை தாராளமாக செலவிடுவதும், பல வகையான சாக்குப்போக்குகளை முன்வைப்பதுமான பரிதாப நிலையையே இங்கு காணுகிறோம். இதுவே தற்கால உண்மை நிலையாகும். இந்தியாவிலும்கூட பெரும் போஸ்டர் விளம்பரங்களற்ற (பரலோக அரசினால் நினைத்தருளப்படுகிற) தேவ ஊழியர்களும், அவர்களது சபையோரும், அவர்களது குடும்பங்கள், பெண் சகோதரிகள் அநேக துன்பங்களையும் அவமானங்களையும் அனுபவித்துக்கொண்டிருக்க, உலகத்தால் போற்றப்பட்டுக் கொண்டிருக்கும் ஊழியர்கள் என பெயர்கொண்டோர், அவர்கள் பிள்ளைகள், அவர்கள் வீட்டுப் பெண்கள் மாட மாளிகைகளிலே நிம்மதியாக வாழ்ந்து, நிம்மதியாக படுத்தெழும்புகிறார்கள். பாதிக்கப்பட்டு சோர்வுற்றிருக்கும் நமது ஆவிக்குரிய சகோதர சகோதரிகளைக் குறித்து விசாரிப்பதற்கோ ஆன உதவி செய்யவோ, ஒரு அறிக்கை விடவோ மனமில்லை.    இதுதான் இன்றைய கிறிஸ்தவம். ஆகவே, உண்மையான தேவ ஜனமே!  உங்களை அழைத்தவரை மாத்திரமே நம்புங்கள். அரசியலை  நம்பும் ஊழியர்களால்   உங்களுக்குப் பாதுகாப்பில்லை.    அவர்கள் அரியணை ஏறவே விரும்புகிறார்கள். சிறையிலிருந்த வாலிபனான யோசேப்பு நம்பியிருந்த பானபாத்திரக்காரரின் தலைவன் தன் பதவியில் அமர்த்தப்பட்டபின் யோசேப்பை நினைக்காமல் மறந்துவிட்டான் அல்லவா.(ஆதி.40:14-23  ) ஆனால், யோசேப்பை கர்த்தர் மறக்கவில்லை. நீங்கள் கர்த்தரை நம்புங்கள். உங்கள் பரலோக எஜமானுடைய வேலையையே நீங்கள் செய்கிறீர்கள். உங்களை பாதுகாக்க அவர் இருக்கிறார். நீங்கள் உலக அரசிடம் மண்டியிட வேண்டியதில்லை. அவர்கள் உங்களிடம்  வந்து   மண்டியிடச் செய்வார்.  தேவனுடைய ஊழியர் என்று பெயர்களை தரித்துக்கொண்டவர்கள் தங்கள் சுய நன்மைகளுக்காக  அந்நிய தேவர்களை சேவிப்பவர்களிடம் சென்று அவர்கள் முன்னே குனிந்து கைகட்டி நின்ற காட்சியை போட்டோக்களில் கண்டோமே. இப்படிப்பட்டவர்களால்    கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படுகிறதா?  இப்படிப்பட்டவர்களுக்கும் நமது ஜீவனுள்ள தேவனாகிய இயேசுவுக்கும் சம்பந்தமுண்டா?    சிந்தியுங்கள். ஆகவே,   ஜீவனுள்ள தேவனால் அனுமதிக்கப்பட்டதே தற்போதைய நிலை பரம்.  பெரிய மீன்களைப் பிடிக்க   சிறிய மீன்களை  கர்த்தர்  பயன்படுத்த வேண்டியதாயிருக்கிறது. ஆனால், ஏற்ற வேளையிலே சிறிய மீன்களை கர்த்தர் பாதுகாப்பார். எனவே கலங்கவேண்டாம். ஆகவே உங்கள் வாக்குரிமையை நேர்மையாக,  சரியாக பயன்படுத்த கர்த்தருடைய உதவியை நாடுங்கள். கிறிஸ்தவர்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தமே இல்லை என்பதால் உங்கள் வாக்குகளை கர்த்தருக்கு சித்தமில்லாத காரியத்தில் பயன்படுத்தாதீர்கள். அப்படி நீங்கள் செய்தால் உங்களுக்கு ஆசீர்வாதமில்லை.  யோவான் 6:15  ஐ பாருங்கள்.  நமது ஆண்டவரைத் தேடிவந்த அரசியல் மேன்மையை உதறிவிட்டு  விலகிச் சென்றார் என்று காண்கிறோம். ஆகவே நீங்களும் அவரையே பின்பற்றுங்கள்.  இப்பொழுதும் ஆட்சி செய்யும்  அரசாங்கத்தையும் கர்த்தரே அமைத்தவர். ராஜாக்களை ஏற்படுத்துகிறவர் அவர்தானே. ரோமர்  13:1-7   வரை எடுத்து வாசித்துப்பாருங்கள். நீங்கள்  கலகமில்லாமல்   அமைதலான ஜீவியம் செய்யும்படிக்கு உங்களை ஆளுகிறவர்களுக்காக, உங்கள் அதிகாரிகளுக்காக ஜெபியுங்கள். இதுவே நாம் கர்த்தரிடமிருந்து பெற்றுக்கொண்ட கட்டளையாகும்.  ராஜாக்களை ஏற்படுத்துகிறவரும், ராஜாக்களை தள்ளிவிடுகிறவரும் தமது வேலையை செய்வார். இந்த அவரது வேலையை நாம் கையிலெடுக்கக் கூடாது. அவர் கிரியை செய்ய அவரை விட்டு விடுங்கள்.

இறுதியாக ஒன்றை கூற விரும்புகிறேன். 1. பேதுரு  4:14-16, 2:19-20  வரை வாசியுங்கள். இன்று தேவ பிள்ளைகளுக்கும், அவரது ஊழியருக்கும் உண்டாயிருக்கும் நெருக்கங்கள்  தங்கள் தங்கள் சுய இச்சைகளினால் உண்டானதா? ஆம் என்றால் தேவனோடு உடனே ஒப்புரவாகுங்கள். (சகேயுவின் ஒப்புரவாகுதலை நினையுங்கள்). தேவ ஊழியர்களும் தங்கள் தங்கள் தவறுகளைஎண்ணிப் பார்க்கவேண்டும். மனந்திரும்பவேண்டும். மனந்திரும்பாவிட்டால் சிட்சைகள் விட்டு நீங்காது.

பிரியமான தேவ ஜனமே! கிறிஸ்துவின் நிமித்தம் பாடுபடவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். சிலுவையில்லாத வாழ்க்கை கிறிஸ்தவ வாழ்க்கையல்ல. லூக்கா 14:27  ல் "தன் சிலுவையை சுமந்துகொண்டு எனக்குப் பின் செல்லாதவன் எனக்கு சீஷனாயிருக்கமாட்டான்" என்று நமது கர்த்தர் இயேசு சொல்லுவதை நினையுங்கள். 

ஆகவே, கிறிஸ்து இயேசுவின் நிமித்தம் பாடுகளை அனுபவிக்க விரும்பாமல் உலக அரசியலுக்குள் ஓடி ஒழியவோ அல்லது தஞ்சமடையவோ முயற்சிக்கவேண்டாம். பழைய ஏற்பாட்டு எஸ்தர், தானியேல் இவர்கள் பின் செல்ல முயற்சிக்கவேண்டாம். தம்மைப் பின்பற்றிவர அழைத்த கர்த்தர் இயேசுவை பின்செல்ல அர்ப்பணியுங்கள்.

கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதித்து அற்புதமாக வழிநடத்துவாராக!

"ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்." (1.பேதுரு 4:16 )

(ஒவ்வொரு தேவ ஊழியரும், தேவ பிள்ளைகளும் உணர்வடைய வேண்டுமென்பதே எமது தூய்மையான நோக்கமாகும்.)

 

Druckversion | Sitemap
© The Lord is my Banner Full Gospel Church Hamm - Reproduction of parts or of all of the content and files this website is providing in any form of the The Lord is my Banner Full Gospel Church Hamm website is prohibited other than for individual use only and may not be copied and shared with a third party.